மீன் படகிலிருந்து அந்தோனி இறங்கியபோது வேகமாக வந்து வியாபாரிகள் சூழ்ந்து கொண்டனர். அந்தோனி மகன் சூசையை கூப்பிட்டு ஒழுங்காக பார்த்து வியாபாரம் செய்.
டேசியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க நானும் போய் எல்லாவற்றிற்கும் அரேஞ்ச் பண்ணுகிறேன் என்றவாறு வேகமாக வீட்டிற்கு கிளம்பினார் எதிரே வந்த இடிந்தகரை பஸ்ஸிலிருந்து இறங்கிய மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை பார்த்ததும் வாங்க படகுக்கு போயிட்டு வர கொஞ்சம் தாமதமாகிவிட்டது வீட்டுக்கு போகலாம்.
என்றவாறு வந்திருந்தவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் அந்தோனி வாசலில் மீன் வலையை வேகமாக சரி செய்து கொண்டிருந்த மரியம்மாள் எழுந்து உள்ளே போக வந்திருந்தவர்களை அமரச் செய்துவிட்டு உள்ளே வந்து மரியம்மா சீக்கிரம் டேசிக்கு துணியை உடுத்திக் கூட்டிட்டு வா.
அதற்கு முன்னாலே சாப்பிடுவதற்கு வாங்கி வைத்திருந்த பட்சணங்களை எடுத்து வை என்றார் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மத்தியானம் தானே வாரதா சொன்னாங்க இப்பவே வந்துட்டாங்களே டேசி அவளுக்கு பிரண்டு வீட்டுக்குள்ள போனா என்றாள்.
மாரியம்மாள் நீ போய் முதலிலே பட்சணங்கள் எல்லாம் எடுத்து வை சாப்பிட்டு கிட்ட இருக்கும் அப்புறமாக அவளை கூட்டிண்டு வந்து துணி உடுக்கச் சொல்லு என்று சொல்லிவிட்டு முன் அறைக்கு வந்தார் காரிலே தான் வருவீங்கன்னு என்று எதிர்பார்த்தேன்.
அதுவும் மத்தியானம் தானே வரதா சொன்னீங்க அதனாலே டேசி யாரோ சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருக்கா இருங்க இப்ப வந்துடுவா அதுக்குள்ளே டிபன் பண்ணிடலாம் என்றார்.
பொதுவாக மாப்பிள்ளை ஜோசப்பின் அப்பா விக்டர் குளைச்சலிலே இருந்து கார் பிடிக்க ரொம்ப காசு ஆகும் நான் அதுவும் சரிதான்னு நாகர்கோவிலுக்கு வந்தால் உங்க ஊர் இடிந்தகரை பஸ்ஸும் ரெடியாக நின்னுச்சு சாறு உப்பு நேரடியாக போய் சேர்ந்து விடலாமே என்றுதான் பஸ்ஸிலே வந்தோம்.
முதலிலே அஞ்சு கிராமம் வந்து கார் பிடிச்சு வரலாம்னு தான் முடிவு பண்ணினோம் எம் பொண்ணு நாளைக்கு மெட்ராஸுக்கு போகணும்.
அதுதான் சீக்கிரம் போயிட்டு வந்துவிட்டால் தயார் பண்ணுவதற்கு வசதியாக இருக்கும்னு தான் சீக்கிரம் வந்தோம் என்றாள்.
ஜோசப்பின் அம்மா மரியம்மாள் எல்லோருக்கும் காப்பி டிபன் தந்துவிட்டு மனதுக்குள்ளே முனகிக்கொண்டு வேகமாக டொசியை தேடி கிளம்பினாள் நான் வரவில்லை என்னை யாரும் பெண் பார்க்க வரவேண்டாம் என்று எத்தனை முறை சொல்லிவிட்டேன்.
நான் அத்தான் சேவியரைத்தான் கட்டிக்கொள்வேன் நீ போய் உங்க வீட்டுக்காரரிடம் சொல் வீணாத வம்பு பண்ணாதே சும்மா வந்து துணியை உடுத்திக் கொண்டு நில்லு அவங்க பொண்ணு பார்த்துட்டு போகட்டும்.
நாளை கழித்து கிறிஸ்துமஸ் இந்த நேரத்திலே நீ இப்படி இப்படி பேசினா வீட்டிலே கிறிஸ்துமஸும் கொண்டாட முடியாது.
அப்புறம் இழவுதான் நடக்கும் நான் வர முடியாதுன்னா முடியாது என்ன செய்யணுமோ செய்துக்கோ கிறிஸ்துமஸும் கொண்டாட வேண்டாம் ஒரு சந்தோஷமும் எனக்கு வேண்டாம்.
சேவியர் அத்தா என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறேனோ அன்னைக்குத்தான் எனக்கு சந்தோஷமும் கொண்டாட்டமும் என்று சொல்லி முடிக்க முன் உள்ளே வந்த அந்தோனி ஏசி கிளம்பு என்றார்.
நான் வர முடியாது எத்தனை முறை சேவியர் அத்தானை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன பிறகும் கேட்காமல் நீங்கள் எனக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பீர்கள் சேவியர் ஒரு பண்ணீ இனி நேரடி ரைப்பது சும்மா ஒரு ரன் பிடிக்கிற படகு கூட இல்லாமல் எவன் கூடவோ தினக்கூலிக்கு விஷயம் மூன்று போய்க்கொண்டிருக்கிறான்.
பாரு நான் பார்த்திருக்கிற பிள்ளைக்கு நான்கைந்து போடு இருக்கு பெரிய பங்களா வச்சிருக்கார் ஒரே பையன் நீ கல்யாணம் முடிஞ்சு போனா சுகமா ஜீவனம் நடத்தலாம்.
சும்மா ஒன்னுமில்லாத திருப்பலி பயலுக்கெல்லாம் உன்னை கட்டி வைக்க முடியாது சரி கவும்பு என்றார் டேசி அடம் பிடிக்க எங்கு உனக்கு நல்லா தெரியும் இல்லையா என்றவர்.
அவள் தலைமுடியை கூத்தாக பிடித்து தூக்கி தரதரவென இழுக்க டேசியின் தோழியின் அம்மா வந்து தடுக்க ஒழுங்காக இவளை வரச் சொல்லுங்கள் வீணாக நம்ம முறை ஊர் கிரிஸ்தும்ஸ் கொண்டாட விடாமல் என்னை கொலைக்காரனாக மாற்றப் பார்க்கிறாள் என்று கத்தினார்.
அந்தோனி ஓம்மா டேய் உன்னை பொண்ணுதானே பார்க்க வந்திருக்கிறார்கள் இப்படி கிறிஸ்துமஸ் நேரத்திலே எந்தவிதமான அபசகுண செயல்கள் இந்த ஊரிலே நடக்க வேண்டாம்.
அவர்கள் பெண் பார்த்துவிட்டு போகட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தாள் இடிந்தகரை தேவாலயம் மிகவும் அழகாக ஜோடிக்கப்பட்டு கிறிஸ்துவின் வருகைக்கான இரவு நடுநிசை திருப்பலிக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
திருப்பலி ஆரம்பமாவதற்கு முன் எல்லோரும் வீடுகளில் புத்தாடைகள் அணிவதில் முனைந்திருக்க பேசி நேரடியாக ஆலயத்திற்கு வந்து மணிக்கூண்டில் கட்டியிருந்த ஆலய மணியை அடிக்க என்னவோ ஏதோ என்று ஊர் மக்கள் எல்லோரும் தேவாலயத்திற்கு முன்னால் கூட ஆரம்பித்தனர்.
தேவாலய மணியோசையைக் கேட்ட பங்கு தந்தை டேவிட் டேசியின் அருகில் வந்து என்னம்மா என்ன விஷயம் கிறிஸ்துமஸ் திருப்பணி தொடங்க வேண்டிய இந்த நேரத்தில் வந்து ஏன் ஆலய மணியை அடித்தாய் என்றார் பாதர்.
நான் ஏற்கனவே எங்களிடம் சொல்லியிருந்த பிரச்சனைதான் எங்கப்பா என்னையும் என் மாமி மகன் சேவியரையும் பிரிக்கப் பார்க்கிறார் என்னை வேறு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் பார்க்கிறார்.
நீங்கள் தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றாள் கோபமாக ஓடிவந்த அந்தோனியை தடுத்து நிறுத்திய பங்குத் தந்தை ஏன் அந்தோனி கோபப்படுகிறாய் அவள் விரும்பிய பையனை திருமணம் செய்து வைப்பதில் உனக்கு என்ன தயக்கம் என்றார்.
பாதர் அவன் ஒன்னுக்கும் இல்லாதவன் தினக்கூலிக்கு மீன் பிடிக்கிறவன் இவள் கல்யாணம் முடிஞ்சு கண்ணை கசக்கிக்கிட்டு இருந்தால் எனக்குத்தானே கஷ்டம் பல்லை கடித்தார் நாங்க ரொம்ப சுகமாகத்தான் இருப்போம் அப்படி பிரச்சனைனாலும் இவர் கிட்ட போய் கண்கலங்க மாட்டேன் பாதர் என்றால்.
டேசி விம்பாகர் அந்தோனி கிறிஸ்துமஸ் அதுவுமாக உன் பெண் விரும்பியதை நடத்தி வை அதுவே உன் பெண்ணுக்கு கொடுக்கிற கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கட்டும் போ கிறிஸ்துமஸ் முடிந்ததும் டேசிக்கும் சேவியருக்கும் நடக்க வேண்டிய திருப்பலிக்கு ஏற்பாடு செய் என்றார் பங்கு தந்தை டேவிட் நீங்கள் சொன்ன ஒரே காரணத்திற்காக செய்கிறேன் பாதர் என்று அந்தோனி கிளம்ப எல்லோரும் நிகழ்ச்சியாக கிறிஸ்துமஸ் திருப்பலிக்கு கிளம்பினர்